Followers

Sunday, July 15, 2012

பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்!

பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்!

பர்மியர்களோடு நான் தபூக்கில் இருந்த போது நிறைய பழகி இருக்கிறேன். சொந்த தொழில் செய்வதில் மிகுந்த அக்கறை உள்ளவர்கள். மியான்மரில் இவர்களுக்கு கொடுக்கப்படும் கொடுமைகளை கருத்தில் கொண்டு அகதிகள் அந்தஸ்தில் பல லட்சம் பேர்களை சவுதி அரசு பராமரித்து வருகிறது. அவர்களுக்கு அகதிகள் என்ற தனி அட்டை ஒன்றை கொடுத்து பர்மாவில் பிரச்னைகள் முடியும் வரை சவுதியில் குடும்பத்தோடு தங்க அனுமதிக்கப்பட்டள்ளனர். அந்த வகையில் பல பர்மிய நண்பர்களை பெற்றுள்ளேன்.



சுமார் 15 இலட்சம் முஸ்லி்ம்கள் பர்மாவில் வாழ்கிறார்கள். இதில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பர்மியர்கள். மீதமானவர்கள் வங்காளிகள். இந்தியாவில் இருந்து சென்றவர்கள். தமக்கென தனியான மொழி கலாச்சாரங்களை கொண்டவர்கள். அராபிய மன்னன் அரகனினால் பலாத்காரமாக நாடுகடத்தப்பட்ட அரபு முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கள் வணிக கலம் நடுக்கடலில் விபத்துக்கு உள்ளானதனால் பர்மாவின் பக்கம் வந்து சேர்ந்தனர். பர்மிய பெண்களை மணந்து அங்கேயே கீழைத்தேய வர்த்தகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இது நடந்தது 9ம் நுற்றாண்டுகளில். மொகாலாய படைகள் தங்கள் எல்லைகளை விரித்த போது இவர்கள் அவர்களிற்கான வர்த்தக முகவர்களாக செயற்பட்டனர். இதன் பலனாக அதிகாரம் மிக்கவர்களாகவும், பணபலமிக்கவர்களாகவும் திகழ்ந்தனர். இது தான் இன்றைய தினத்தில் பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. பர்மாவை காட்டி கொடுத்தவர்கள். பர்மாவின் செல்வங்களை அரேபியாவிற்கு சுரண்டி விற்றவர்கள், பர்மிய பெண்களை கற்பழித்தவர்கள் பலாத்காரமாக மணந்தவர்கள் போன்ற அரசியல் குற்றச்சாட்டுகளே இன்றைய இனவாத சங்காரத்தின் ஊற்றுவாய்கள்.

1950 களில் ரோகீங்கியா பிரதேசம் தனி பிரதேசமாக இனங்காணப்பட்டது. இதில் இந்திய வங்காள இனத்தவர்கள் ஒன்று சேர்ந்து காணப்பட்டனர். அராஜகமான தங்கள் இராணுவ அரசியல் இருப்பினை பேணிக்கொள்ள பர்மிய ஜெனரல்கள் ரோகீங்கிய முஸ்லிம்களிற்கு எதிரான இனவாத அரசியலை அதன் செயல்நெறிகளில் சுயமாக செயற்பட அனுமதியளித்தனர். பிக்குகள் சொல்லும் திசையில் சுடுமாறு போலிஸாரையும் பிக்குகள் காட்டும் பக்கத்தில் குண்டெறியுமாறு இராணுவத்தையும் பணித்தார்கள் இந்த பாசிஷ இராணுவ ஆட்சியாளர்கள்.

பர்மியா மலாய் முஸ்லிம்கள், பர்மிய சீன முஸ்லிம்கள் போன்றவர்கள் கவனமாக தவிர்க்கப்ட்டு இந்த ரோகீங்கிய முஸ்லிம்கள் மட்டும் இலக்கு வைக்கப்பட்டனர்.


(இந்த குழந்தைகள் அந்த பாவிகளை என்ன செய்தது? என்ன குற்றத்திற்காக இவர்கள் கொல்லப்பட்டனர்?)

கூட்டாக பள்ளிவாசலில் தொழ முடியாது. பள்ளிவாசல் கட்ட முடியாது. மதரஸா நடத்த முடியாது.

பெரிய வியாபார முயற்சிகளில் ஈடுபட முடியாது.

இளைஞர்கள் போலிஸில் பதிவு செய்ய வேண்டும்.

மியன்மாரின் இரசாயன கழிவுகள் இவர்கள் பகுதியிலேயே கொட்டப்படுகின்றன.

கடல்களில் மீன் பிடிக்க முடியாது.

1 ஏக்கரிற்கு மேல் விவசாயநிலங்களை வைத்திருக்க முடியாது.

அவசர பந்தோபஸ்து சட்டத்தின் கீழ் 5 வருடங்கள் தடுத்து வைக்க முடியும்.

பெண்கள் அவர்கள் சம்மதம் இன்றி கட்டாய குடும்ப கட்டுப்ப்பாட்டிற்கு உள்ளாக்கப்படுவர்.

கற்பழிக்கப்பட்டாலோ, படுகொலை செய்யப்பட்டாலோ வைத்திய சான்றிதழை பெறுவது குற்றம்.


(இந்த கோரத்தை செய்தது மனிதர்கள்தானா? அல்ல மிருகங்கள்)

இராணுவ அதிகாரிகள் நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் நினைத்த பெண்களை ட்ரக்குகளில் அள்ளி செல்வர். அது தொடர்பில் பொலிஸில் முறையிட்டால் முறைப்பாட்டாளர் பின்னர் பிணமாக்கபடுவார்.

பல ரோஹியான்கள் மியன்மார் இராணுவத்தில் கூலி வேலை செய்கிறார்கள். இவர்கள் ஆயுட்கால கொத்தடிமைகள்.


(சோகத்திலெல்லாம் பெரிய சோகம் சொந்த மண்ணை பிரியும் சோகமல்லவா?)

இவர்கள் இப்போது கண்ட இடத்தில் நாயை சுடுவது போல சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். வகைதொகையின்றி கற்பழிக்கப்படுகிறார்கள். உலக மீடியாக்கள் செய்தியாக சிலதை சொல்லி பலதை விட்டு விடுகின்றன. இலங்கை விவகாரத்தில் ஜெனீவாவரை சென்று ஆட்டம் போடும் அமெரிக்கா இங்கு நடுநிலை என்கிறது. அரபு நாடுகள் மௌனிக்கின்றன.




16.March.1997 - மண்டலாயின் முதல் மஸ்ஜித் தாக்கப்படுகிறது. 2000 க்கும் மேற்பட்ட பவுத்த கூட்டம் பள்ளிவாசலினுள் புகுந்து குரான் பிரதிகளை பற்ற வைக்கிறது. மஸ்ஜிதை நெருப்பிடுகிறது. பின்னர் உடனடியாக அந்த கூட்டம் முஸ்லிம் வர்த்தக மையங்களை சூறையாடுகிறது. அகப்பட்ட முஸ்லிம்களை போட்டு தாக்குகிறது. ஏன் கொலையும் செய்கிறது. வீடுகள் சூறையாடப்படுகின்றன. இளஞ்சிறுமியர் கற்பழிக்கப் படுகின்றனர். பெண்கள் தீ வைத்து கொளுத்தப்படுகின்றனர். இந்த அநியாயங்களை செய்தவர்கள் மியன்மாரிய இராணுவத்தினர் அல்ல. அங்குள்ள புத்த பிக்குகள். அவர்களே இந்த கொடூரங்களுக்கு தலைமை தாங்கினர். 100 பிக்குகள் கைது செய்ய்ப்பட்டு தேசிய வீரர்களாக பின்னர் விடுதலை செய்யப்படுகின்றனர்.


(தொழும் பள்ளி வாசலைக் கூட கொலைகளமாக்கும் பவுத்தர்கள். மற்றுமொரு காத்தான்குடி)

12.February.2001 - இம்முறை கலவரத்திற்கு ஆளான பிரதேசம் சிட்வே, மற்றும் டாவுன்கு. கேக் விற்பனையில் ஈடுபட்ட ஒரு முஸ்லிம் பெண்ணிடம் கேக் வாங்கி சாப்பிட்ட புத்த பிக்குகள் கும்பல் பணம் தருவதற்கு மறுக்கிறது. அவளுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட முனைகிறது. ஆத்திரமடைந்த பெண் அவர்களை தாக்க முற்படுகிறாள். அவள் உறவினர் உதவிக்கு விரைந்து அவர்களை விரட்டியடிக்கிறார். சில மணி நேர இடைவெளியில் தலைமை நாயக்க தேரர் தலைமையில் பிக்குகள் வந்து கலகம் செய்கின்றனர். அவர்கள் பின்னால் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர். பற்றி எரிகிறது. நகரம். கொலை. கொள்ளை. சித்திரவதை. கற்பழிப்பு என எதுவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து முடிக்கிறது கும்பல். 200 முஸ்லிம்கள் வெறித்தனமாக கொல்லப்படுகின்றனர்.


(இந்த உடல்களை எல்லாம் கடலில் கலந்தால் கடலின் நிறம் கூட சிகப்பாக மாறி விடுமே!ரமலானில் நோன்பு வைத்த நிலையில் தாக்கப்பட்ட தாய் முஸ்லிம்கள்.)

15.May.2001 - தபூ பிரதேசம் கொளுந்து விட்டு எரிகிறது. முஸ்லிம்களிற்கு எதிரான துவேஷ பரப்புரைகள் பிக்குகளால் பன்சலைகளில் செய்யப்படுகின்றன. பன்சலை மணியை அடித்தவுடன் மக்கள் திரண்டு பிக்குகளை பாதுகாக்க முஸ்லிம்கள் மீது தாக்குதல் செய்யும் நிகழ்ச்சி நிரல் நாடு முழுதும் பயிற்றுவிக்கப்படுகிறது. தேவையான பொழுதுகளில் பன்சலை மணி அடிக்கப்படுகிறது. Han Tha மஸ்ஜிதுனுள் புகுந்த பவுத்த கூட்டம் அவர்களை அடித்து விரட்டுகிறது. பின்னர் பிக்குகள் கட்டளையிடுகின்றனர். ”முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்த முடியாது” என. அது சட்ட ரீதியற்ற ஆனால் அதிகாரமிக்க கட்டளையாக பர்மாவில் உருப்பெருகிறது.


(பர்மிர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த அளவு நெருக்கம் என்பதை விவரிக்கும் அந்த கால அராபிய எழுத்துருக்களைக் கொண்ட நாணயங்கள். இஸ்லாத்தின் அடிப்படையான 'ஏக இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. முகமது நபி இறைவனின் தூதராக உள்ளார்கள்' என்ற வாசகம் அந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது)

பர்மிய ஜீன்டா அரசினுள் ஆதிக்கமிக்க சக்தியாக உள்ளவர்கள் தேசியவாத சிந்தனைகொண்டவர்களும், Theravada Buddhism மதவாதிகளுமாவர். இவர்களே இந்த அநியாயங்களின் பின்னணியில் செயற்படுபவர்கள். மதவாதிகளினதும், தேசியவாதிகளினதும், இராணுவத்தினரினதும் ஒரு கூட்டு தாக்குதலையே ரோகீங்கிய முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர்.

2012 June. இராணுவ ஒத்துழைப்புடன் முஸ்லி்ம்களி்ற்கு எதிரான அநியாயங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கூட்டு கொலை, கூட்டு கற்பழிப்பு, கூட்டு சூறையாடல் என ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் குழுக்களாக இவை நிகழ்த்தி முடிக்கப்படுகின்றன. மீடியாக்கள் உள்நுழைய முடியாத இரும்பு திரைக்கு பின்னால் பல கொலைகளங்கள் உள்ளன.


கொத்து கொத்தாக இங்கே கொல்லப்படுபவர்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் சகோதரர்கள். முஸ்லிம் சகோதரிகள். பொஸ்னியாவை நினைவிற்கு கொண்டு வரும் கூட்டு கற்பழிப்பிற்கு உள்ளாக்கப்படுபவர்கள் முஸ்லிம் சகோதரிகள். ஆனால் முஸ்லிம் உம்மா வேடிக்கை பார்க்கிறது. எகிப்தின் முர்ஸி பற்றி பெருமிதப்படும் இஹ்வான்கள் ஒரு அறிக்கையுடன் மியன்மாரை மறந்து விட்டனரா? கிலாபா கனவுகானும் ஹிஸ்பு தஹ்ரீர் தோழர்கள் ரத்தத்தினால் நிரம்பும் மியன்மார் பற்றி சிந்திக்க மாட்டார்களா. பேரீத்தம் பழ பெட்டிகளை அனுப்புதாலும், குர்பான் இறைச்சிகளை அனுப்புவதாலும் மியன்மரிற்கு உரியதை செய்து விட்டோம் என அரபு தேசங்கள் நிம்மதியடைய போகின்றனவா?

மியன்மார் என்பது பொஸ்னியாவின் களத்தை விட மோசமானது. ஹேர்ஸிகோவினாவினது களத்தை விட மோசமானது. கொஸாவோ களங்களை விட மோசமானது. ஈழத்து சோகத்தை விட பெரும் சோக மயமானது. இங்கு காஷ்மீரின் கண்ணீர், காஸாவின் பஞ்சம், செச்னியாவின் அவலம், ஆப்கானின் இரத்தம், முள்ளி வாய்க்காலின் கொடூரம், ஈராக்கின் சோகம் என எல்லாமே கலந்து நிற்கிறது. எல்லாம் நடந்து முடிந்த பின் “ த கில்லிங் ஃபீல்ட் ஆஃப் பர்மா” என டாக்குமெண்டரி தயாரிக்க பலர் உள்ளனர். ஆனால் கொல்பவர்களை தடுக்கவோ அல்லது கொல்லப்படுபவர்களை காக்கவோ யாரும் இல்லை. அவர்களுக்கு இறைவனைத் தவிர உதவ கூடியவர்கள் எவரும் இல்லை. அவர்களின் மரண ஓலங்கள் இன்றும் பல நாடுகளைக் கடந்தும் . நெடுந் தொலைவுக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

சில வாரங்கள் முன்பு லண்டன் வந்திருந்த பர்மாவைச்சேர்ந்த நோபல் பரிசு பெற்ற ’’ஆங்க் சான் சூசீ ‘’ கூட ’’ரோகிங்னியா முஸ்லிம்கள் பர்மாவின் நிரந்தர பிரஜைகள் அல்ல’’ என்ற ரீதியில் தனது கருத்தை தெரிவித்தார். மேலும் ரோகிங்னியா முஸ்லிம்களின் படுகொலைகளை அவர் கண்டிக்கவுமில்லை,மாறாக நாட்டில் இனங்களுக்கிடையில் குழப்ப நிலை உருவாகியுள்ளது.மிகவும் நுணுக்கமாக கையாளா வேண்டும்’’ என்றுமே குறிப்பிட்டார். இந்த மக்களுக்கு ஆதரவு கரம் நீட்ட தற்போது உலகில் எந்த அரசும் தயாராக இல்லை.

தற்போதய பர்மிய முஸ்லிம்கள் எந்த அளவு பர்மாவுக்கு சொந்தக்காரர்கள் என்பதை விவரிக்கும் பர்மாவில் புழக்கத்தில் இருந்த இஸ்லாமிய நாணயம்

எனவே தோழர்களே! தோழிகளே! உங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை இந்த மக்களை நோக்கி திருப்பி விடுங்கள். ஜகாத் பணம், ஃபித்ரா பணம், அன்பளிப்பாக கொடுக்க நினைத்த பணம் அனைத்தையும் இந்த ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை போக்குவதாக இருக்கட்டும். பணம் கொழிக்கும் அரபு செல்வந்தர்கள் தங்களின் செல்வத்திலேயே மித மிஞ்சிய மயக்கத்தில் உள்ளனர். இறைவன் நினைத்தால் ஒரு நொடியில் நிலைமையை தலைகீழாக மாற்றி விடுவான் என்பதை மறந்து வாழ்கின்றனர்.

"சீனா உலகத்தின் தாதா'வாக (வல்லரசு) நடந்து கொள்ள முயன்று வருகிறது. தனது நாட்டின் சக்தியை நிலைநாட்டிக் கொள்ளும் குறுகிய மனப்பான்மையுடன், வடகொரியா, பர்மா போன்ற மோசமான கொடுங்கோல் அரசுகளுக்குத் துணை நிற்கிறது. இந்தியாவும், சீனாவை அப்படியே காப்பி அடிக்க முயல்கிறது' என்கிறார் அமர்த்யா சென்.
"இந்தியா உலகளவில் செல்வாக்கற்ற நாடாக இருந்த காலங்களில் உலக நாடுகளுக்கு ஒழுக்கம் பற்றி பாடம் எடுப்பதிலேயே நேரத்தை கழித்துக் கொண்டிருந்தோம். சீனா அளவிற்கு இல்லையென்றாலும், ஓரளவிற்கு இப்பொழுது ஆற்றல் பெற்றவுடன், ஒழுக்கத்தையும், விழுமியங்களையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு, நமது பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிறேம்'' என்கிறார் சென். “உலகின் மனிதாபிமானம் மிக்க தலைவர்களில் ஒருவரான, எனது இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங், மியான்மரின் கொலைகார ஆட்சியாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, அவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியுடன் இணைந்து நின்று புகைப்படும் எடுத்துக் கொள்கிறார். இதனைப் பார்க்கும்போது, இந்தியாவின் விசுவாசக் குடிமகனான எனது இதயம் நொறுங்கி விட்டது'' என்று பேசியுள்ளார் அமர்த்யா சென். பர்மாவில் உள்ள கொடுங்கோலாட்சி பற்றியும் அங்கு உள்ள மோசமான மனித உரிமைச் சூழல் பற்றியும் இந்திய மக்களிடம் பொதுக்கருத்து சிறிதும் இல்லை என்கிறார் அமர்த்யா சென்.


வரும் ரமலானில் இந்த மக்களுக்காக அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுவோம். சவுதியில் ஜூம்ஆ பிரசங்கத்தில் சிரிய முஸ்லிம்களுக்காகவும் பர்மிய முஸ்லிம்களுக்காகவும் அதிகமதிகம் பிரார்த்திக்கப்படுகிறது. உங்களின் பிரார்த்தனையில் இவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையான நிறுவனங்களை தொடர்பு கொண்டு அந்த மக்களுக்கு உங்களால் ஆன சிறு உதவிகளையும் செய்ய மறக்காதீர்கள்.

பர்மிய முஸ்லிம்களும், ஈழத்து தமிழர்களும், சிரிய முஸ்லிம்களும் தங்களின் சொந்த நாட்டு பிரச்னைகளை சுமுகமாக முடித்து எல்லா வளமும் பெற்று சுகமாக வாழ எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறைவனிடம் இறைஞ்சி இந்த பதிவை முடிக்கிறேன்.

டிஸ்கி: இப்படி ஒரு பதிவை பதியச் சொல்லி வேண்டுகோள் விடுத்த குவைத்தில் உள்ள முபாரக்குக்கும், உடன் லிங்குகளை அனுப்பித் தந்த வாஞ்சூர் அண்ணனுக்கும், கைபர் தளத்துக்கும், விக்கி பீடியாவுக்கும் நன்றிகள்.


மேலும் விபரங்கள் அறிய

http://en.wikipedia.org/wiki/Rohingya_people

இந்த தளத்திற்கு சென்று உங்களின் கண்டனங்களையும் தெரிவியுங்கள்:








46 comments:

ஹுஸைனம்மா said...

பதறவைக்கிறது. பாலஸ்தீனத்திற்காகக் குரல் கொடுக்கும் அரபு தேசங்கள் இதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை. இங்குள்ள செய்தித்தாட்களில்கூட இதுபற்றி எதுவும் செய்திகள் காணோம். வலைத்தளங்களிலிருந்துதான் தெரிந்துகொண்டேன்.

சிராஜ் said...

/* பர்மிய முஸ்லிம்களும், ஈழத்து தமிழர்களும், சிரிய முஸ்லிம்களும் தங்களின் சொந்த நாட்டு பிரச்னைகளை சுமுகமாக முடித்து எல்லா வளமும் பெற்று சுகமாக வாழ எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறைவனிடம் இறைஞ்சி இந்த பதிவை முடிக்கிறேன். */

ஆமின்..ஆமின்..ஆமின்...

சிராஜ் said...

/* ஆனால் முஸ்லிம் உம்மா வேடிக்கை பார்க்கிறது. எகிப்தின் முர்ஸி பற்றி பெருமிதப்படும் இஹ்வான்கள் ஒரு அறிக்கையுடன் மியன்மாரை மறந்து விட்டனரா? கிலாபா கனவுகானும் ஹிஸ்பு தஹ்ரீர் தோழர்கள் ரத்தத்தினால் நிரம்பும் மியன்மார் பற்றி சிந்திக்க மாட்டார்களா. பேரீத்தம் பழ பெட்டிகளை அனுப்புதாலும், குர்பான் இறைச்சிகளை அனுப்புவதாலும் மியன்மரிற்கு உரியதை செய்து விட்டோம் என அரபு தேசங்கள் நிம்மதியடைய போகின்றனவா? */

எப்படி கேட்டாலும், நம்ம உம்மத்துக்கு சூடு சொரணை வராது... உலக இன்பங்களில் மூழ்கி கிடக்கிறார்கள் அரேபிய ஆட்சியாளர்கள்... அவர்கள் நீக்கப்பட்டு உண்மை முஸ்லிம்களிடம் ஆட்சி பொறுப்பு வருகையில் இன்ஷா அல்லாஹ்.. நமது பொற்காலம் திரும்பும்... நிச்சயம் திரும்பும்...இன்றைய இளைஞர்கள் நிறைய நம்பிக்கை அளிக்கிறார்கள்....உலக அளவில்...

khaleel said...

இந்த அளவா சூழ்நிலை மோசமாக இருக்கிறது? எனக்கு அதிகமாக ஒன்றும் தெரியாது இந்த பிரச்சினை பற்றி. இத்தனைக்கும் நான் தினசரி ஆங்கில, தமிழ் நாளிதழ்கள் படித்து கொண்டிருக்கிறேன்.

Anonymous said...

///பர்மிய ஜீன்டா அரசினுள் ஆதிக்கமிக்க சக்தியாக உள்ளவர்கள் தேசியவாத சிந்தனைகொண்டவர்களும், Theravada Buddhism மதவாதிகளுமாவர். இவர்களே இந்த அநியாயங்களின் பின்னணியில் செயற்படுபவர்கள். மதவாதிகளினதும், தேசியவாதிகளினதும், இராணுவத்தினரினதும் ஒரு கூட்டு தாக்குதலையே ரோகீங்கிய முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர்.///

Theravada Buddhism என்பதுதான் இலங்கையிலும் இருக்கிறது. தாய்லாந்திலும் இருக்கிறது. இதனால்தான் இலங்கையில் சிறுபான்மையினர் மிகவும் அல்லல்படுகின்றனர்.

மூலை முடுக்கெல்லாம் பௌத்த விகாரைகளும் அரச மரக்கிளைகளையும் நட்டி, அங்குள்ள சிறுபான்மையினரின் இந்துக்கோயில், பள்ளிவாசல்களையும்
பலாத்காரமாக கபளீகரம் செய்கின்றனர்.

பக்கத்தில் பலமான இந்தியா இருந்தும், இவைகளை தடுக்க முடியவில்லை. ஆகக் குறைந்தது எதிர்க்கக்கூட முடியாமல் பேசாமல் இருக்கிறது. அதற்கு வேண்டியது, வியாபார நலன்கள். அவ்வளவுதான்!

பர்மா முஸ்லிம்கள்பற்றி இன்றுவரை ஒரு முஸ்லிம் நாடாவது, இதுபற்றி குரல் கொடுக்கவில்லை. இதுதான் நமது சகோதரத்துவம்.

சகோதரத்துவம் நிவாரணங்களினால் வெளிப்படுவதனால் மட்டும் என்ன பயன்? கட்டுரையாளர் சொன்னதுபோல், முஸ்லிம் நாடுகள் நினைத்தால் ஓரிரு நாள்களில் அல்லல்படும் எமது ஈமானிய உறவுகளின் நிலைமைகளை சீராக்க முடியும். எமது சகோதரர்களே உல்லாசமான வாழ்வில் திளைக்கும்போது, அதற்கு சந்தர்ப்பம் அரிது.

நோபல் பரிசு பெற்ற ஆங் சுகி என்பவர் கூட, முஸ்லிம்கள் பர்மாவின் பிரசைகள் அல்ல என்று இனவாத திமிருடன் உளறியிருக்கிறார்.

தவறுதலாக தறுதலைகளுக்கு நோபல் பரிசு கிடைத்தால், அவை என்ன உளறினாலும் பெரிய இடங்களும் ஏற்றுக்கொள்ளும் என்பது உலக நியதிபோலும்!

Anonymous said...

இலங்கை விவகாரத்தில் ஜெனீவாவரை சென்று ஆட்டம் போடும் அமெரிக்கா இங்கு நடுநிலை என்கிறது.

why do you support sri lanka in killing tamils? why do you hate lankan tamils?

சிராஜ் said...

/* பணம் கொழிக்கும் அரபு செல்வந்தர்கள் தங்களின் செல்வத்திலேயே மித மிஞ்சிய மயக்கத்தில் உள்ளனர். இறைவன் நினைத்தால் ஒரு நொடியில் நிலைமையை தலைகீழாக மாற்றி விடுவான் என்பதை மறந்து வாழ்கின்றனர். */

மாற்ற வேண்டும்.. அரபுக்களிடம் இருந்து செல்வத்தை இறைவன் எடுக்க வேண்டும்... செல்வம் குறைந்தால் தான் அவர்கள் மார்க்கத்தின் பக்கம் கவனம் செலுத்துவார்கள்... நாம் அடைந்த எல்லா வெற்றிகளும் நம்மிடம் இருந்த செல்வத்தால் அல்ல... தக்வா என்ற இறையச்சத்தாலே.... அரபுக்களின் செல்வம் அழியட்டும்.. தக்வா என்ற இறையச்சம் அதிகரிக்கட்டும்... ஆமீன்....

suvanappiriyan said...

அனானி!

//why do you support sri lanka in killing tamils? why do you hate lankan tamils?//

தமிழர்களை கொன்ற விஷயத்தில் ஸ்ரீலங்கா அரசை எந்த முஸ்லிம் ஆதரித்தது.? எல்லோரும் அப்பாவி தமிழர்களை கொன்றதை கண்டிக்கவே செய்தனர்.

எவரும் இலங்கை தமிழர்களை வெறுக்கவில்லை. அவர்களும் எங்களின் சகோதரர்களே. எதிர்ப்பு விடுதலைப் புலிகளை நோக்கியே! அதுவும் அநியாயமாக அப்பாவி முஸ்லிம்களை கொன்றதும் அவர்களின் சொத்துக்களை சூறையாடியதாலுமே! அப்பாவி தமிழர்களையும் கொலைகார விடுதலைப் புலிகளையும் முஸ்லிம்கள் என்றுமே பிரித்தே பார்க்கின்றனர். அவர்களின் தீவிரவாதம் குறைந்தால் ஒருக்கால் எண்ணங்கள் மாறலாம்.

ஜோதிஜி said...

பதிவு சிறப்பாக வந்துள்ளது. நிஜமான அக்கறையுடன் எழுதப்பட்ட எழுத்துக்கு என்னுடைய நன்றி. அதை விட வந்துள்ள கண்ணியமான பின்னூட்டங்கள் உங்கள் பதிவின் தரத்தை அதிகப்படுத்தியுள்ளது. நான் படித்துக் கொண்டு வரும் போது தோன்றிய எண்ணத்தை ஹுஸைனம்மா அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

மனம் கலங்கிவிட்டது. மதம் என்ற வார்த்தைக்காக, ஜாதி என்ற சொல்லுக்காக இந்த உலகில் எத்தனை எத்தனை மனிதர்கள் தினந்தோறும் செத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நம்முடைய சமகால சமூகம் எல்லா விதங்களிலும் அறிவு சார்ந்து வளர்த்து விட்டது என்று இன்னமும் கருதுகிறீர்களா?

suvanappiriyan said...

சகோ ஜோதிஜி திருப்பூர்!

//மனம் கலங்கிவிட்டது. மதம் என்ற வார்த்தைக்காக, ஜாதி என்ற சொல்லுக்காக இந்த உலகில் எத்தனை எத்தனை மனிதர்கள் தினந்தோறும் செத்துக் கொண்டு இருக்கிறார்கள்.//

இறைவனையும் அவர்கள் பின்பற்றும் மார்க்கங்களையும் சரியாக விளங்காததால் ஏற்படும் குழப்பங்களே இவை. தங்களின் எண்ணங்களை அழகிய முறையில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

//நம்முடைய சமகால சமூகம் எல்லா விதங்களிலும் அறிவு சார்ந்து வளர்த்து விட்டது என்று இன்னமும் கருதுகிறீர்களா?//

கண்டிப்பாக இல்லை. வளர்ந்திருந்தால் இந்த அநியாயங்கள் அரங்கேறியிருக்குமா? முள்ளி வாய்க்கால் சம்பவம் நிகழ்ந்திருக்குமா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

ஹூசைனம்மா, சிராஜ், கலீல்!

//மாற்ற வேண்டும்.. அரபுக்களிடம் இருந்து செல்வத்தை இறைவன் எடுக்க வேண்டும்... செல்வம் குறைந்தால் தான் அவர்கள் மார்க்கத்தின் பக்கம் கவனம் செலுத்துவார்கள்... நாம் அடைந்த எல்லா வெற்றிகளும் நம்மிடம் இருந்த செல்வத்தால் அல்ல... தக்வா என்ற இறையச்சத்தாலே.... அரபுக்களின் செல்வம் அழியட்டும்.. தக்வா என்ற இறையச்சம் அதிகரிக்கட்டும்... ஆமீன்....//

//இந்த அளவா சூழ்நிலை மோசமாக இருக்கிறது? எனக்கு அதிகமாக ஒன்றும் தெரியாது இந்த பிரச்சினை பற்றி. இத்தனைக்கும் நான் தினசரி ஆங்கில, தமிழ் நாளிதழ்கள் படித்து கொண்டிருக்கிறேன்.//

//பதறவைக்கிறது. பாலஸ்தீனத்திற்காகக் குரல் கொடுக்கும் அரபு தேசங்கள் இதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை. இங்குள்ள செய்தித்தாட்களில்கூட இதுபற்றி எதுவும் செய்திகள் காணோம். வலைத்தளங்களிலிருந்துதான் தெரிந்துகொண்டேன்.//


வருகை புரிந்து கருத்தை பதிந்தமைக்கும் ஓட்டளித்தமைக்கும் நன்றி!

Anonymous said...

சொந்த நாட்டு மக்களை அவர்கள் குர்து இனத்தை சேர்ந்தவர்கள் தனி நாடு கேட்கிறார்கள் என்பதற்காக ஆயிரணக்கணகானோரை இன அழிப்பு செய்தவர் சதாம் ஹூசைன்.
20 நூற்றாண்டின் முதல் இன அழிப்பு படுகொலைக்கு இரையானவர்கள் ஆர்மினிய கிறித்துவர்கள், காரணம் முஸ்லீம் ஆட்சியாளர்கள்.
சூடானில் டாபர் படுகொலைகள் அரசு ஆதரவுடன் நடைபெற்றவை.அதில் கொன்றவர்கள், கொல்லப்பட்டவர்கள்
முஸ்லீம்கள். அதை இன அழிப்பு என்று எத்தனை முஸ்லீம் நாடுகள், அமைப்புகள் ஒப்புக் கொண்டன.
(கிழக்கு) தைமூர் ஏன் தனி நாடாக
உருவெடுத்தது.அதற்கு காரணமான
படுகொலைகளை செய்தவர்கள் யார்.
இன்றைக்கு பர்மாவில் நடப்பது எந்த விதத்தில் இவற்றிற்கு குறைந்தது அல்ல.பர்மா முஸ்லீம்களுக்காக கண்ணீர் வடிப்பவர்கள் மேற்கூறிய இன ஒழிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்கட்டும்.
பெளத்த பிக்குகளை மட்டும் விமர்சிக்காமல் இந்த படுகொலைகளை செய்தவர்கள்,ஆதரித்தவர்கள்,வேடிக்கை பார்த்தவர்கள் யார் என்பதை யோசித்துப் பார்க்கட்டும்.

Anonymous said...

பர்மாவில்தான் ஆட்சியாளர்கள்,பெளத்த பிக்குகள். பாகிஸ்தானில் நடக்கும் குண்டு வெடிப்புகளுகு யார் காரணம்.
அகமதியாக்களுக்கு அங்கு என்ன உரிமைகள் உள்ளன.அவர்களும் சிறுபான்மையினர்தானே.அவர்களை கொடுமைப்படுத்துவதை கண்டித்து நீங்கள் எங்காவது எழுதியுள்ளீர்களா.
சில நாடுகளில் மதப்பெரும்பானையினர் சிறுபான்மையினரை நடத்தும் விதமும்,
செய்யும் செயல்களும் எப்படி நியாயப்படுத்தப்படுகின்றன.பர்மாவில்
முஸ்லீம்கள் இப்படி நடத்தப்படுவதை பொறுக்க முடியாமல் எழுதும் நீங்கள்
ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டபின் என்ன எழுதினீர்கள் என்பது எங்களுக்கும் தெரியும்.உங்கள் எழுத்தில் இருப்பது மனிதாபிமானமல்ல, உங்களுடைய மதத்தினை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகிறார்களே என்பதால் எழும் வருத்தம்.அதே வருத்தம்/ஆத்திரம்
பிற மதத்தவர் பாதிக்கப்ப்டுப்போதோ, 26/11ல் நடந்த தாக்குதல் போன்றவற்றின் போதோ ஏன் வருவதில்லை.

suvanappiriyan said...

அனானி!

சதாம் ஹூசைனையோ, தாலிபான்களையோ, செப்டம்பர் 11 தாக்குதலையோ மற்ற நாடுகளில் நடக்கும் இன அழிப்புகளையோ நான் என்றுமே ஆதரித்தது இல்லை. சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு இஸ்லாமிய பெயரில் எந்த அழிவு வேலைகள் செய்தாலும் அதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. இஸ்லாம் சரியாக சென்றடையாததே காரணமேயொழிய இஸ்லாமிய சட்டங்கள் காரணமல்ல.

suvanappiriyan said...

சகோ கலீல்!

//இந்த அளவா சூழ்நிலை மோசமாக இருக்கிறது? எனக்கு அதிகமாக ஒன்றும் தெரியாது இந்த பிரச்சினை பற்றி. இத்தனைக்கும் நான் தினசரி ஆங்கில, தமிழ் நாளிதழ்கள் படித்து கொண்டிருக்கிறேன்.//

முஸ்லிம்கள் என்று வந்து விட்டால் நம்மை பொது எதிரியாக்கி விடுவது உலக வழக்கு. இதற்கு பத்திரிக்கைத் துறை மட்டும் விதி விலக்கா என்ன?

Anonymous said...

Please write about all atrocities committed by Malay Muslims against Tamils in Malaysia. Thanks.

suvanappiriyan said...

Anony!

//Please write about all atrocities committed by Malay Muslims against Tamils in Malaysia. Thanks.//

மலேசிய இந்துக்கள் தொடர்ந்து அரசாங்கத்தின் மீது “நம்பிக்கை” வைக்க வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த நம்பிக்கையைக் கொண்டு அரசாங்கம் அந்த சமூகத்துடன் நம்பிக்கை’ சிறந்த முறையில் தொடர்புகளை ஏற்படுத்தி அந்த சமூகம் சவால்களைச் சமாளிக்கவும் சிறந்த வாழ்க்கைக்கான தனிப்பட்ட இலட்சியங்களை அடைவதற்கும் உதவ முடியும் என்றார் அவர்.

“அந்த சமூகத்துக்கு நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். அவர்களுடைய கனவுகள் நிறைவேறுவதற்கு தேவையான உதவிகளை நாங்கள் செய்வோம்,” என தைப்பூசத் திருவிழாவை ஒட்டி www.1malaysia.com.my என்ற தமது வலைப்பதிவில் சேர்த்துள்ள செய்தியில் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

நேர்த்திக் கடனைச் செலுத்துவதையும் தியாகத்தையும் தைப்பூசம் குறிப்பதாக கூறிய நஜிப், அந்தத் திருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்படுவதாகச் சொன்னார்.

சிறந்த வாழ்க்கைக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான மகிழ்ச்சியான எதிர்காலத்துக்கும் தைப்பூசத்தின் போது பலர் பிரார்த்தனை செய்வர் என்றார் அவர்.

“தமக்கும் தாம் நேசிக்கின்றவர்களுக்கும் நல்ல வாழ்க்கைத் தரத்தைப் பெறுவதற்கு முன்னேற்றம் காண வேண்டும் என விழைவது அடிப்படை மனித இயல்பாகும்.”

முன்னேற்றத்துக்கான உணர்வுகளை அரசாங்கம் அறிந்துள்ளது, புரிந்து கொண்டுள்ளது என்றார் பிரதமர்.

மலேசியாவில் தைப்பூசத்தைக் கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் தமது வாழ்த்துக்களை நஜிப் அந்தச் செய்தியில் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

“மலேசிய இந்துக்கள் இந்த புனிதமான நாளைக் கொண்டாடும் வேளையில் நாம் மீண்டும் ஒரு முறை பல தரப்பட்ட பண்பாடுகளையும் பாராட்டுவோம்,” என்றும் அவர் எழுதியுள்ளார்.

Anonymous said...

' சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு இஸ்லாமிய பெயரில் எந்த அழிவு வேலைகள் செய்தாலும் அதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. இஸ்லாம் சரியாக சென்றடையாததே காரணமேயொழிய இஸ்லாமிய சட்டங்கள் காரணமல்ல.'

அதனால்தான் ஒசாமா பின் லாடன் பற்றி அப்படி எழுதினீர்களா.இஸ்லாமிய சட்டம் என்ற பெயரில்தான் அகமதியாக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.நீங்கள் வாழும் நாடு எது.அங்கே பிற மதத்தவருக்கு என்னென்ன உரிமைகள் உள்ளன.மலேசியாவில் hindraf அமைப்பினை ஒடுக்க என்னென்ன செய்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.

கோவி.கண்ணன் said...

//தொழும் பள்ளி வாசலைக் கூட கொலைகளமாக்கும் பவுத்தர்கள்.//

முஸ்லிம்கள் எழுதாமல் வேறு யாரெனும் எழுதினால் இந்தவிவகாரம் இன்னும் நன்றாக எடுத்துச் செல்லப்படும், காரணம் நீங்களெல்லாம் பாகிஸ்தானில் அன்றாடம் மசூதிகளில் வெடிக்கும் வெடிகுண்டுகளைப் பற்றிப் பேசுவதே இல்லை. இஸ்லாமியருக்கும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் நடக்கும் பிரச்சனைகளை மட்டும் எழுதும் பொழுது மற்றவர்கள் இஸ்லாமியர்களுக்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்த கேள்வியையும் கேட்பார்கள் என்பது உங்களுக்கு புரியாதது இல்லை.

மதம் என்னும் மூடத்தனம் சொந்த மக்களையும் கூட மதவேறுபாட்டால் கொன்றுவிடும் போது மாற்று இனத்தில் பிற மதங்களை எந்த உணர்வுடன் அனுகும் என்று சொல்லத் தேவை இல்லை.

இன்னல்படுபவர்களுக்கு பரிதாபங்கள், நிகழ்ச்சிக்கு வருத்தமும் கண்டனமும் என்று மட்டுமே வெறும் டெம்ளேட் பின்னூட்டமாக போட்டுச் செல்வதில் எனக்கு விருப்பம் இல்லை.

Anonymous said...

இப்படியே ஒன்றொன்றாக எழுதி,[சவுதி அரேபிய முஸ்லீம்களின் பதற வைக்கும் எதிர்காலம்] என்று எழுதும் வரைக்கும் வர வாழ்த்துக்கள்

ராசின் said...

அந்த மக்களின் துயரம் தீர வேண்டும் என்று விரும்புவோம்.எத்தன பெயரில் என்றாலும் மானுடத்தின் மீதான எந்தவிதமான எத்தன பெயரிலான தாக்குதளையும் ஏற்றுக்கொள்ள் முடியாது.மதப்படுகொலை புரிந்தூர் தண்டிக்க பட வேண்டும்.ஆனால் இதிலும் தேவையில்லாம் இழதுயர்த்தை இழிவு செய்கிறீர்கள்.அமேரிக்கா அதன் நலத்திற்காக என்றாலும் இலங்கை அரசை கண்டிக்க எடுத்த சிறு முயற்ச்சியையும் குறை கூருகின்றீர்கள்.உங்களுக்கு பர்மிய அரசை-காட்டுமஈராண்டிகளை கண்டிக்கும் தகுதி இல்லை அய்யா! //இலங்கை விவகாரத்தில் ஜெனீவாவரை சென்று ஆட்டம் போடும் அமெரிக்கா இங்கு நடுநிலை என்கிறது//இந்த வரிகள் இதைத்தான் சுட்டுகின்றன.

Rafik said...

Salaam Bro., I hope, the picture of dead people with budh pics is from Tibet Earthquake 2010, not from Myanmar. Please check these links for details. Once you verified, please remove it from your post.

http://www.elephantjournal.com/2010/04/monks-and-laypersons-work-to-recover-from-earthquake/

http://www.indybay.org/newsitems/2010/04/17/18644975.php

https://www.facebook.com/photo.php?fbid=496090023750790&set=a.192454204114375.55809.100000493907231&type=1&theater

Also you can do google image search with Kyigudo Earthquake.

suvanappiriyan said...

திரு ராசின்!

//உங்களுக்கு பர்மிய அரசை-காட்டுமஈராண்டிகளை கண்டிக்கும் தகுதி இல்லை அய்யா! //இலங்கை விவகாரத்தில் ஜெனீவாவரை சென்று ஆட்டம் போடும் அமெரிக்கா இங்கு நடுநிலை என்கிறது//இந்த வரிகள் இதைத்தான் சுட்டுகின்றன.//

ஈழத் தமிழர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. அவர்களும் எங்களது இனம்தானே!

ஆனால் அமெரிக்கா போட்ட ஆட்டம் கூட தங்களின் சுயநலத்துக்காக என்று நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். அதைத்தான் நானும் குறிப்பிட்டேன். மியான்மரில் இவ்வளவு கொடூரம் நடந்தும் அதைப் பற்றி வாய் திறக்காது இருக்கும் அமெரிக்காவின் இரட்டை வேடத்தை சுட்டிக் காட்டவே அவ்வாறு எழுதினேன். ஈழத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் ஆதரிப்பவனே நான்.

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//முஸ்லிம்கள் எழுதாமல் வேறு யாரெனும் எழுதினால் இந்தவிவகாரம் இன்னும் நன்றாக எடுத்துச் செல்லப்படும், காரணம் நீங்களெல்லாம் பாகிஸ்தானில் அன்றாடம் மசூதிகளில் வெடிக்கும் வெடிகுண்டுகளைப் பற்றிப் பேசுவதே இல்லை. இஸ்லாமியருக்கும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் நடக்கும் பிரச்சனைகளை மட்டும் எழுதும் பொழுது மற்றவர்கள் இஸ்லாமியர்களுக்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்த கேள்வியையும் கேட்பார்கள் என்பது உங்களுக்கு புரியாதது இல்லை.//

பாகிஸ்தானில் நடக்கும் குண்டு வெடிப்புகளை ஆதரித்தது யார்? அவ்வாறு அப்பாவி மக்களை இலக்காக்குபவர்கள் மனித குல விரோதிகள்: இஸ்லாத்தின் எதிரிகள். நடக்கும் பல குண்டு வெடிப்புகளில் ரா, மொசாத், சிஐஏ போன்ற அமைப்புகளுக்கும் பங்கு இருப்பதாக பல பாகிஸ்தானிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இதற்கெல்லாம் மதத்தை குறை காணுவதை விடுத்து உண்மையான குறைகள் எங்கு உள்ளதோ அதை களைய முயற்ச்சிக்க வேண்டும்.

ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அன்றும் கண்டன பதிவை இட்டேன். நம்மால் முடிந்தது எதுவோ அதைத்தானே செய்ய முடியும்.

suvanappiriyan said...

அனானி!

//.நீங்கள் வாழும் நாடு எது.அங்கே பிற மதத்தவருக்கு என்னென்ன உரிமைகள் உள்ளன.மலேசியாவில் hindraf அமைப்பினை ஒடுக்க என்னென்ன செய்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.//

மலேசியாவில் இந்துக்கள் எந்த அளவு சுதந்திரமாக உள்ளனர் என்பதை அங்கு ஒரு தங்கி நேரிடையாக பார்த்தவன் நான். தமிழகத்தை விட சுதந்திரமாகவே அந்த மக்கள் அங்கு வசிக்கின்றனர்.

suvanappiriyan said...

சலாம் சகோ ரபீக்!

//Salaam Bro., I hope, the picture of dead people with budh pics is from Tibet Earthquake 2010, not from Myanmar. Please check these links for details. Once you verified, please remove it from your post.//

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. தவறுதலாக இடம் பெற்ற அந்த படத்தை நீக்கி விட்டேன்.

suvanappiriyan said...

அனானி!

//இப்படியே ஒன்றொன்றாக எழுதி,[சவுதி அரேபிய முஸ்லீம்களின் பதற வைக்கும் எதிர்காலம்] என்று எழுதும் வரைக்கும் வர வாழ்த்துக்கள் //

'எண்ணம் போல் வாழ்வு' :-)

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

salam,

ஒரு வாசக சகோ.என்னை கேட்டுகொண்டதின் பெயரில் நான் எழுத நினைத்த கட்டுரையை தாங்கள் எழுதியுளீர்கள் நன்றி ....பதிவு அங்கு நடந்த கொடூரத்தை படம் பிடித்து காட்டியுள்ளது.....

புதிய வரவுகள்:வெற்றி....வெற்றி....வெற்றி....!!!....www .tvpmuslim .blogspot .com

naren said...

நண்பரே,

பர்மாவில் அத்துமீறல்கள் நடந்துள்ளது என தெரிகிறது. வருந்ததக்க விஷயம்தான். கண்டனதுக்குரியது. சிறுபான்மையினர் வன்முறையினால் பாதிக்கப்படும் போது, அவர்களின் பாதிப்பை வார்த்தையால் சொல்லவும் விவரிக்கவும், ஆறுதலும் கூற முடியாது.

கூறிய விஷயங்கள் அனைத்தும் உண்மையா என்று தெரியவில்லை. படங்களின் நம்பகத்தன்மையும் நமக்கு தெரியாது. ஆனால் சமபவங்கள் நடந்துள்ளன.

ரோகீங்கிய முஸ்லிம்கள் மட்டும் குறிவைக்கப்படுவதால் இது இஸ்லாமிற்கு எதிராகவும் எடுத்துக்கொள்ளமுடியாது.

பாகிஸ்தானில் அகமதியாக்கள் இந்துக்கள் பங்களாதேஷில் இந்துக்கள், சவுதியில் ஷியாக்கள், மற்றும் ஏனைய நாடுகளில் சிறுபான்மையினர் பாதிக்கப்படும்போது, அவைகளை நியாயபடுத்தி காரணபடுத்தி மூடிமறைப்பதால், பர்மா சம்பவங்களை நியாயப்படுத்தவும், கவலைப்படாமல் இருக்க சமூகத்தால் முடிகிறது.

இதற்கு ஒரே வழி மதங்கள் இருந்தாலும் மனித நேயம் இல்லையென்றால் இது போன்ற சம்பங்கள் நடைப்பெறும்.

தமிழ்நாட்டில், சிறுபானமையினாரான இஸ்லாமியர்கள் சுதந்திரமாக இல்லையென்று சொல்வதற்கு எந்த அளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு மலேசியாவில் இருக்கும் இந்து சிறுபானையினருக்கும் சுதந்திரம் இல்லை எனக்கூற உரிமை இருக்கின்றது.

நன்றி.

suvanappiriyan said...

நரேன்!

//இதற்கு ஒரே வழி மதங்கள் இருந்தாலும் மனித நேயம் இல்லையென்றால் இது போன்ற சம்பங்கள் நடைப்பெறும்.//

ஒத்துக் கொள்கிறேன்.

//தமிழ்நாட்டில், சிறுபானமையினாரான இஸ்லாமியர்கள் சுதந்திரமாக இல்லையென்று சொல்வதற்கு எந்த அளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு மலேசியாவில் இருக்கும் இந்து சிறுபானையினருக்கும் சுதந்திரம் இல்லை எனக்கூற உரிமை இருக்கின்றது.//

கண்டிப்பாக! அங்கு அவர்களின் உரிமை பாதிக்கப்பட்டால் அதை எதிர்த்து குரல் கொடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு.

//பாகிஸ்தானில் அகமதியாக்கள் இந்துக்கள் பங்களாதேஷில் இந்துக்கள், சவுதியில் ஷியாக்கள், மற்றும் ஏனைய நாடுகளில் சிறுபான்மையினர் பாதிக்கப்படும்போது, அவைகளை நியாயபடுத்தி காரணபடுத்தி மூடிமறைப்பதால், பர்மா சம்பவங்களை நியாயப்படுத்தவும், கவலைப்படாமல் இருக்க சமூகத்தால் முடிகிறது.//

அந்த நாடுகளில் ஒரு சில குழுக்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றன. ஆனால் பர்மாவிலோ அரசே முன் நின்று நடத்துவதுதான் உச்சகட்ட கொடுமை.

மற்றபடி சவுதியில் சிறுபான்மையினரான ஷியாக்கள் எந்த கொடுமைக்கும் ஆளாக்கப்படுவதில்லை. தமாம், கதீஃப்,அல் ஹஸா போன்ற பகுதிகளில் பெரும் செல்வந்தர்களாகவும் பல தொழில்களை நடத்தக் கூடியவர்களாகவும் இன்றும் இருந்து வருகின்றனர்.

suvanappiriyan said...

சலாம் சகோ!

//salam,

ஒரு வாசக சகோ.என்னை கேட்டுகொண்டதின் பெயரில் நான் எழுத நினைத்த கட்டுரையை தாங்கள் எழுதியுளீர்கள் நன்றி ....பதிவு அங்கு நடந்த கொடூரத்தை படம் பிடித்து காட்டியுள்ளது.....//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

//மலேசியாவில் இந்துக்கள் எந்த அளவு சுதந்திரமாக உள்ளனர் என்பதை அங்கு ஒரு தங்கி நேரிடையாக பார்த்தவன் நான். தமிழகத்தை விட சுதந்திரமாகவே அந்த மக்கள் அங்கு வசிக்கின்றனர். //

I have stayed in Malaysia for more than a decade and know their problems better than you. You dont have to tell me this. Just as always, you are under the false impression that in Malaysia "paalum thenum oduthu" for Tamils. Ithellam yaravathu kaathula poo vechittu varravan kitta sollungo :)

Anonymous said...

மலேசியாவில் தமிழர்கள் நாசமாய் போனால், பர்மாவில் இஸ்லாமியர்களும் நாசமாய்த்தான் போவட்டுமே. என்ன இப்போ.

UNMAIKAL said...

//Anonymous said... I have stayed in Malaysia for more than a decade and know their problems better than you. You dont have to tell me this. Just as always, you are under the false impression that in Malaysia "paalum thenum oduthu" for Tamils. Ithellam yaravathu kaathula poo vechittu varravan kitta sollungo :) //

// Anonymous said...மலேசியாவில் தமிழர்கள் நாசமாய் போனால், பர்மாவில் இஸ்லாமியர்களும் நாசமாய்த்தான் போவட்டுமே. என்ன இப்போ. //

மலேசியாவில் த‌மிழர்க‌ள் நாச‌மாய் போகிறார்க‌ளா? அல்ல‌து ம‌லேசியாவை த‌மிழர்க‌ள் ந‌ன்றி கெட்டு நாச‌மாக்குகிறார்க‌ளா?


மலேசியாவில் தமிழர்கள் பெரும்பாலோர் அந்நாட்டு மலாய்க்காரர்களை விட சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பல தமிழர்கள் அரசாங்கத்தால் கௌரவப்பட்ட பட்டங்கள் அளிக்கப்பட்டு ஆரம்பத்திலிருந்து இதுவரையிலும் மலேசியாவில் சட்ட சபையில் உறுப்பினர்களாகவும் ஆட்சியில் இருக்கும் கூட்டணியில் தமிழர்கள் அங்கம் வகிப்பதுடன் அன்றிருந்து இன்று வரை ஆட்சியில் தமிழர்களும் மந்திரிகளாக இருந்து வருகின்றனர்

தமிழர்கள் மந்திரிகளாக இல்லாத அரசாங்கமே இதுவரையிலும் மலேசியாவில் கிடையாது.

கைதிகளாகவும் கூலிகளாகவும் மலேசியாவில் குடியேறிய தமிழர்களின் சந்ததிகளில் கணிசமானவர்கள் இன்று மலேசியாவில் மிக செல்வாக்குடன் உள்ள உயர்ந்த பணக்காரர்களின் வரிசையில் இருந்து வருகிறார்கள்.

மலேசியாவின் பெரும் நகரங்களிலும் பிரதான சாலைகளுக்கு குடியிருப்புகளுக்கு தமிழர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு இருக்கிறது.

எத்தனையோ அரசாங்க தமிழ் பள்ளிக்கூடங்கள் இருப்பதுடன் மேலும் உருவாககப்பட்டு வருகின்றன

தமிழர்களில் சிலர் தான் மலேசியாவில் கண்ட கண்ட காலி பொது இடங்களில் முதலில் நாலே நாலு செங்கலை வைத்து சில நாட்கள் கழித்து அதற்கு துணி கட்டி குங்குமம் விபூதி பூசி போக போக விரிவாக சுற்றி சுவரெழுப்பி பூசை புணஸ்காரங்கள் என பழக்கி கதைகள் பல கட்டி ஆயிரக்கணக்காண கோயில்களாக்கினார்கள்.

அவ்வாறு உள்ள சில கட்டுகளில் சிலவற்றை பொது நலத்தை கருதி அரசாங்கம் அகற்ற வேண்டிய சூழ்நிலைகளில் அதற்கு பிரதி மாற்றிடம் கொடுத்த பின்னர் தான் செயலாற்றுகிறது.

நூற்றுக்கணக்காண இதுபோன்ற நிகழ்வுகள் மாற்றிடம் கொடுக்காமல் தமிழக‌த்தில் வட்டாட்சியர், மாஜிஸ்ட்ரேட்களின் ஆணைகளை கொண்டே அன்றாடம் நிகழ்ந்து வருகின்றது.

மலேசியாவில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவில் இன்ட்ராஃப் எனப்படும் ஒரு மதவாத இயக்கம் உருவாக்கப்பட்டு மலேசியாவில் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள், கோயில்கள் இடிக்கப்பட்டு வருகின்றன என்று மிக மிக உத்வேகத்துடன் ஊடகங்களின் மூலமாக நச்சு செய்திகளை பரப்பி வருகின்றது.

இந்தியாவில் ஆர்.எஸ். எஸ். வழிமுறையில் மலாய் முஸ்லீம்கள் தொழுகை இடங்களில் பன்றி தலைகளையும் பன்றி இறைச்சியும் போடுவதுடன் தாங்களாகவே தங்கள் இடங்களில் மாட்டுத்தலையை வெட்டி போட்டுக்கொண்டு மதக்கலவரங்களை உருவாக்க எத்தனிதவற்றை எல்லாம் மலேசிய அரசாங்கம் முலையிலே கிள்ளி எறிந்த நிகழ்வுகள் பல உண்டு


தமிழர்கள் வாழும் சிறப்பான வாழ்வை மலேசியாவுக்கு வந்து செல்லும் நடிகர்கள், படபிடிப்பு குழுவினர், பல நிகழ்வுகளுக்கு வந்து செல்லும் தமிழர் பிரபலங்கள், வருடத்திற்கு பல முறை வந்து செல்லும் திராவிட கழக தலைவர்கீ வீரமணி, இத்யாதி இத்யாதி அனைவரும் நன்கு அறிவர்.

பல இனம் வாழும் மலேசியாவில் கடும் கொள்ளையர்கள், சட்டத்துக்கு புறம்பான செயல்களில் வழிநடத்தில்களில் நீண்ட காலமாக தமிழர்களே அதிகமாக தவறாது இன்று வரை முன்னிலை வகித்து வருவதால் மற்ற சமூகத்தினர்கள் தமிழர்களை அச்சத்துடனே நோக்கும் சூழ்நிலை தெளிவாகி இருக்கிறது.

வந்தாரை வளத்துடன் வாழ வைத்துக்கொண்டிருக்கும் மலேசியாவை தமிழன்
நன்றியுடன் சிரம் தாழ்த்தி போற்ற வேண்டும்

.

UNMAIKAL said...

தமிழ்க் கலாசாரம், பண்பாட்டை மலேசிய தமிழ் குழந்தைகள் அறிந்து கொள்வதற்காக தமிழ் இலக்கியங்களை மலாய் மொழியில் மொழிபெயர்க்கும் பணியில் மலேசிய பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வுத் துறை ஈடுபட்டுள்ளது.

இந்தப் பணிக்கு மலேசிய மதிப்பில் 8 லட்சம் ரிங்கிட்டுகள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்குத் தேவையான நிதியை இந்திய அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

மலேசியாவில் சுமார் 20 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

50 முதல் 60 சதவிகித மலேசிய தமிழ் குழந்தைகள் மலாய் வழி பள்ளிக் கூடங்களில் படித்து வருகின்றனர்.

வெகு சிலரே தமிழ் வழி பள்ளிக் கூடங்களில் படிக்கின்றனர்.


Source: thatstamil 17 jul 2012

UNMAIKAL said...

மலேசியாவில் தமிழர்கள்

RM8 million to transform and modernise Indian retail shops

MALACCA 25 June (MIC) -- Nearly 100 Indian retailers are expected to take part in the Retail Shop Transformation (Tukar) programme by year-end.

MIC President Datuk Seri G. Palanivel said currently, 38 retail shops belonging to the Indian community had taken part in the programme aimed at helping them modernise the shops.

"To realise this aspiration, the government has allocated RM8 million through the Malaysia Suria Cooperative to transform and modernise selected Indian retail shops to boost their income," he told reporters after closing the 2012 Young Generation Students Science Festival here.

Meanwhile, Palanivel, who is also Minister in the Prime Minister's Department, said the party was planning to ask the government to set up an Urban Transformation Centre (UTC), specifically for the Indian community.

He said there were a need for such a centre as many people faces problems, including some who were in debt and more.
--MIC MALAYSIA INDIAN CONGRESS மலேசிய இந்தியர் காங்கிரஸ்
http://www.mic.org.my/mic_news.php?id=245

UNMAIKAL said...

மலேசியாவில் தமிழர்கள்

மலேசிய இந்தியர் காங்கிரஸ்
1.MIC Youth

MIC Youth is a wing of the Malaysian Indian Congress, targeted at recruiting capable Indian youth. Most of the members are young professionals, graduates and entrepreneurs. MIC youth provides an avenue for these capable individuals to contribute to society at large, and the Indian community in particular.


மலேசிய இந்தியர் காங்கிரஸ் MIC WOMEN’s WING
2.Wanita MIC

Womens Wing works hand-in-hand with MIC with the common goal of upgrading the overall standing of Indians in Malaysia, starting with the Indian women. MIC wings truly believe that women have tremendous capability and potential, and if given the right opportunities and nurturing, they will truly shine.

மலேசிய இந்தியர் காங்கிரஸ்
3.Puteri MIC

PuteriMIC,is a wing of the Malaysian Indian Congress, MIC, targeted at recruiting capable Indian youth. Focusing the areas of education, entrepreneurship and social betterment. Puteri MIC works hand-in-hand with MIC Women Wing with the common goal of upgrading the overall standing of Indians in Malaysia, starting with the Indian youngsters.

மலேசிய இந்தியர் காங்கிரஸ்
4.Putera MIC

To enlist young Malaysian Indians between the ages 18 to 30, to harness their energies towards socio-political action through Putera MIC , a network of young Malaysian Indians . To establish a strong network among community leaders to identify potential young people who can be enlisted into the Putera MIC.

மலேசிய இந்தியர் காங்கிரஸ்
5.AIMST UNIVERSITY

In 1025, Rajendra Cholan, the son of the Raja Raja Cholan, launched an attack and hoisted the Chola flag in the historical Bujang Valley. In 2006, Dato Seri created history in that same valley.

The AIMST University has been built on 228 acre plot of land at a cost of approximately RM 480 million at Semiling, Sungai Petani.

The University incorporates the faculties of Medicine, Engineering, Biotechnology, Dentistry, Pharmacy and Informational Technology. Its colloborative partner is Bristol University, which is one of the leading university in Britain.

மலேசிய இந்தியர் காங்கிரஸ்
6. MIED & KOP DIDIK

In 1984, the MIED was founded and the study loan are given to deserving students. Since the number of the students studying overseas has increased Dato seri has established the KOP DIDIK Berhad which gives study loans to members who save at least RM 25 per month under its savings scheme.

Between 1982 and 1985, Dato Seri was also instrumental in collecting RM 4.5 million to purchase the Vanto Academy in Petaling Jaya.

மலேசிய இந்தியர் காங்கிரஸ்
7. YAYASAN STRATEGIK SOSIAL

On 26th July the Yayasan Strategik Sosial (YSS) was formed by Dato Seri to study and find solutions for the social ills that are faced by the Indian community. This organisation also conducts various social programs on behalf of a party and government

மலேசிய இந்தியர் காங்கிரஸ்
8. TAFE COLLEGE

The Tafe College situated in Seremban and built on a six acre plot of land is another example of Dato Seri S. Samy Vellu's achievements. It was completed in 1990 at a cost of approximately RM 22 million with the aid of special grant of RM 8 million from the former Prime Minister, Tun Dr. Mahathir Mohamed.

மலேசிய இந்தியர் காங்கிரஸ்
9. YAYASAN PEMULIHAN SOSIAL

The Yayasan Pemulihan Sosial was established in 2002 for the provision of medical care, educational aid for the poor and financial assistance for those who have lost their bread winners. YPS continues to contribute to the well being of the community.

மலேசிய இந்தியர் காங்கிரஸ்
HISTORY

The Malaysian Indian Congress (MIC) is one of the oldest political parties of Malaysia , established in August 1946.

khaleel said...

இந்த கட்டுரையை பற்றியும், பர்மாவில் நடக்கும் நிகள்வுகளையும் பற்றி என்னுடன் பணி புரியும் வந்காளியிடம் சொன்னேன். அதற்க்கு அவர் சொன்னது இது தான் ' இந்த ரோஹிங்காய முஸ்லிம்கள் எங்கள் நாட்டில் திருட்டு தனமாக புகுந்து திருட்டு வேலைகளை மிகவும் இடு படுகிறார்கள். எங்கள் சமுதாயத்தை நாசம் செய்கிறார்கள். (பங்களிகளும் இதையே தான் இந்தியாவில் செய்கிறார்கள்!!) அவர்களுக்கு கிடைப்பது அவர்கள் செய்த பாவத்திற்கு தான்' என்றார். எங்கே போய் முட்டி கொள்வது??

UNMAIKAL said...

ஒரு நாட்டில் நசுக்கப்பட்டு விரட்டப்படுபவர்கள் அனைத்து உடைமையையும் இழந்து கள்ளத்தனமாக பிறநாடுகளுக்கு அகதிகளாக குடியேறும் பொழுது பிடிபடாமல் இருக்க தலைமறைவாகவும் வயிற்றை கழுவ , உயிர் வாழ எதையும் செய்யக்கூடிய சூழ்நிலைகளுக்கு தள்ளப்படுகிறார்கள்.

தமிழகத்திலிருந்து ஏஜன்ட்டுகளால் வஞ்சிக்கப்பட்டு மலேசியாவுக்கு வேலை தேடி வருபவர்களை மலேசியா வாழ் தமிழர்களே அவர்களின் பாஸ்போர்ட்டை பறித்து வைத்துக்கொண்டு கள்ள குடியேறிகளாக்கி கால் வயிற்றுக்கு கூட உணவளிக்காமல் படுக்க இடம் கொடுக்காமல் அடித்து உதைத்து சித்திரவதை செய்து வேலை வாங்கும் காரியம் இன்னும் தொடர்கிறது. சிலர் தடயமின்றி கொலைக்குள்ளாகிறார்கள்.


தப்பிவிடும் சிலர் ஏதேதோ சாக்குபோக்கு சொல்லி குறைந்த வருவாயில் பிறரிடம் வேலை செய்து வரும் பொழுது அரசாங்க சோதனைகளில் மாட்டிக்கொண்டு பாஸ்போர்ட் இல்லாத காரணங்களினால் மலேசிய சிறைகளில் கடும் தண்டணைகளை அனுபவித்து வருகிறார்கள்.

உண்மை நிலை விளங்காதவர்கள் மலேசியா அரசாங்கம் தமிழர்களை நசுக்குவதாக நச்சு பிரசாரம் செய்ய இதுவும் ஒரு சாக்காகி விடுகிறது.

ஈஸ்வரன் said...

வெறுப்பு அரசியலை வளர்க்காதீர்கள். வதந்திகளை பரப்பாதீர்கள். கீழே உள்ள பதிவை கண்டிப்பாக படியுங்கள். உங்களுக்கே புரியும்.

http://blogs.tribune.com.pk/story/12867/social-media-is-lying-to-you-about-burmas-muslim-cleansing/

ஈஸ்வரன்

முகம்மத் சனீர் said...

//ஈஸ்வரன் said...

வெறுப்பு அரசியலை வளர்க்காதீர்கள். வதந்திகளை பரப்பாதீர்கள். கீழே உள்ள பதிவை கண்டிப்பாக படியுங்கள். உங்களுக்கே புரியும்.

http://blogs.tribune.com.pk/story/12867/social-media-is-lying-to-you-about-burmas-muslim-cleansing/

ஈஸ்வரன்//
ஓரிரு படங்கள் இல்லாமல் இருக்கலாம்

என்றாலும் அதை விட பல மடங்கு கூடுதலாக உண்மையான படங்கள் இனையத்தில் உள்ளது

ரோகிங்னியா மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களை அதிகமாக பிரதிநிதிப்படுத்தும் அபிவிருத்திற்கான தேசிய ஜனநாயகக்கட்சியினைச்செர்ந்த அபூ தாஹா’’இவர்கள் மிருகங்களை விடவும் கெவலமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்கள்’’ எனத்தெரிவித்துள்ளார். ரோகிங்னியாவில் 800,000 முஸ்லிம்கள் வாழ்வதாகவும்,இவர்கள் தான் இன்று உலகிலுள்ள மிகவும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் என ஜக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான நிருவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
பர்மா அரசாங்கம் ரோகிங்னியா முஸ்லிம்களை நாட்டின் பிரஜைகளாக கருதுவதில்லை,அந்நாட்டின் பெரும்பான்மை பெளத்தமக்களும் அவர்களை வெருக்கின்றனர்.பிறப்பின் மூலம் தாம் நீண்ட காலம் பர்மாவில் வாழ்வதாக்கூறி தமக்கு அந்நாட்டுபிரஜைகளுக்குரிய உரிமைகள் வழங்கப்படவேண்டும் என ரோகிங்னியா முஸ்லிம்கள் போராடிவருகின்றனர்.ஆனால் அவர்கள் பங்களாதேக்ஷ் நாட்டிலிருந்து வந்து குடியேரிய சட்டவிரோத குடிகள் எனக்கூறி, அந்நாட்டு அரசாங்கம் அந்நாட்டுபிரஜைகளுக்குரிய உரிமைகள் அவர்களுக்கு கொடுக்க மறுக்கின்றது..மனித உரிமைகள் நிருவனத்தின் விசேட செய்தியாளர் ,Toms Ojea Quintana ,அண்மையில் மியன்மாருக்கு விஜயம் செய்தபோது கலவரங்களுக்கான அடிப்படைக் காரணம் ‘’ நீண்டகாலமாக ரோகிங்னியா முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகள்,பிரஜா உரிமை, நடமாடுவதற்கான உரிமை போன்றன மறுக்கப்படுகின்றமையே’’ எனக்குறிப்பிட்டார்.

mubarak kuwait said...

அஸ்ஸலாமு அலைக்கும்
இன்றுதான் உங்கள் பதிவை நான் கண்டேன் அதுவும் செங்கோடிக்கு கண்டன பதிவு எழுதும் போது அங்கே கலையரசன் பதிவை பர்ர்தேன் அங்கிருந்து உங்கள் பதிவிற்கு லிங்க் கிடைத்தது, எனது வேண்டுகோளை ஏற்று மிகவும் சிரமப்பட்டு செய்திகள் சேகரித்து பதிவு எழுதியமைக்கு நன்றிகள். இங்கிருந்து நாம் எப்படி அவர்களுக்கு உதவ முடியும்? என்பதை தெரிவிக்கவும்

Anonymous said...

Thank you for the good writeup. It in fact was a amusement account it.
Look advanced to more added agreeable from you!

By the way, how can we communicate?
My website: Find a doctor based on reviews

Mohamed Shaheed said...

நாம் எப்போது தான் ஓன்று பெருவோம்???
ஓற்றுமையாக இல்லாவிட்டால் இதே கதி தன இந்தியாவிலும் !!!!!!!!!

வேதநாயகம் said...

இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு
الدولة الاسلامية في العراق والشام

கொடி
ஜூன் 2014 அன்றைய நிலவரப்படி கைப்பற்றப்பட்ட நிலப்பகுதி.
ஜூன் 2014 அன்றைய நிலவரப்படி கைப்பற்றப்பட்ட நிலப்பகுதி.
Status Unrecognized state
தலைநகரம் அல்-றக்கா[1]
35°57′N 39°1′E
ஆட்சி மொழி(கள்) அரபி மொழி
அரசாங்கம் இஸ்லாமிய ஆட்சி
நேர வலயம் (ஒ.அ.நே+3)
வெற்றிகள் தொகு

ஈராக்கியப் போரின் உச்சத்தின் போது இக்குழுவானது ஈராக்கின் அல் அன்பார் (Al Anbar), நைனவா (Ninawa), கிர்குக் (Kirkuk) மற்றும் சலாஹுத்தீன் (Salah ad Din) பகுதியில் பெரும்பான்மையையும் மேலும் பாபில் (Babil), தியாலா (Diyala), பக்தாதின் பெரும்பான்மையான பகுதிகள் என்பவற்றிலும் தாக்குதலில் ஈடுபட்டது. இது பகுபாவைத் தனது தலைநகராக அறிவித்துக் கொண்டது.[7][8][9][10] சிரிய மக்கள் போர் தொடக்க காலத்தில் இக்குழுவானது சிரியாவின் அர்-ரக்கா (Ar-Raqqa), அலெப்போ (Aleppo) ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.[11][12] அரசு இராணுவ வீரர்களைக் கொன்றது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான பொது மக்களைக் கொன்றதாகவும் இசிஸ் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.[13] அமெரிக்கக் கூட்டுப் படைகள் இப்பகுதியில் இருந்த காலகட்டதில் இக்குழுவானது பின்னடைவைச் சந்தித்தது. 2012 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இக்குழு தனது உறுப்பினர்களின் எண்ணிகையை 2,500 என இரட்டிப்பாக்கியது.[14] சிரியாவின் வட பகுதியில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை இக்குழு பெற்றுள்ளது.

பாலியல் அடிமைகள் தொகு

இக்குழுவானது யாசிடி மதப்பிரிவுப் பெண்களை பிடித்து பாலியல் அடிமைகளாக விற்கின்றனர். பன்னிரெண்டு அமெரிக்க டாலர்களுக்குப் பெண்களை பாலியல் அடிமைகளாக விற்கின்றனர். மேலும் இந்த அமைப்பானது "கிறுஸ்தவ மற்றும் யாசிடி பெண்கள் மீது தங்களுக்கு உரிமை உள்ளது" எனும் வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் வினியோகிக்கின்றனர். பூப்பெய்தாதப் பெண்களுடன்கூட அவர்கள் பாலியல் உறவு கொள்ளலாம் என அந்தத் துண்டுப் பிரசுரங்களில் கூறப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சிக்கிக் கொண்டவர்களில் சிலர் மணிக்கட்டில் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கும் முயலுகின்றனர்.[15][16]

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்

வேதநாயகம் said...

இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு
الدولة الاسلامية في العراق والشام

கொடி
ஜூன் 2014 அன்றைய நிலவரப்படி கைப்பற்றப்பட்ட நிலப்பகுதி.
ஜூன் 2014 அன்றைய நிலவரப்படி கைப்பற்றப்பட்ட நிலப்பகுதி.
Status Unrecognized state
தலைநகரம் அல்-றக்கா[1]
35°57′N 39°1′E
ஆட்சி மொழி(கள்) அரபி மொழி
அரசாங்கம் இஸ்லாமிய ஆட்சி
நேர வலயம் (ஒ.அ.நே+3)
வெற்றிகள் தொகு

ஈராக்கியப் போரின் உச்சத்தின் போது இக்குழுவானது ஈராக்கின் அல் அன்பார் (Al Anbar), நைனவா (Ninawa), கிர்குக் (Kirkuk) மற்றும் சலாஹுத்தீன் (Salah ad Din) பகுதியில் பெரும்பான்மையையும் மேலும் பாபில் (Babil), தியாலா (Diyala), பக்தாதின் பெரும்பான்மையான பகுதிகள் என்பவற்றிலும் தாக்குதலில் ஈடுபட்டது. இது பகுபாவைத் தனது தலைநகராக அறிவித்துக் கொண்டது.[7][8][9][10] சிரிய மக்கள் போர் தொடக்க காலத்தில் இக்குழுவானது சிரியாவின் அர்-ரக்கா (Ar-Raqqa), அலெப்போ (Aleppo) ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.[11][12] அரசு இராணுவ வீரர்களைக் கொன்றது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான பொது மக்களைக் கொன்றதாகவும் இசிஸ் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.[13] அமெரிக்கக் கூட்டுப் படைகள் இப்பகுதியில் இருந்த காலகட்டதில் இக்குழுவானது பின்னடைவைச் சந்தித்தது. 2012 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இக்குழு தனது உறுப்பினர்களின் எண்ணிகையை 2,500 என இரட்டிப்பாக்கியது.[14] சிரியாவின் வட பகுதியில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை இக்குழு பெற்றுள்ளது.

பாலியல் அடிமைகள் தொகு

இக்குழுவானது யாசிடி மதப்பிரிவுப் பெண்களை பிடித்து பாலியல் அடிமைகளாக விற்கின்றனர். பன்னிரெண்டு அமெரிக்க டாலர்களுக்குப் பெண்களை பாலியல் அடிமைகளாக விற்கின்றனர். மேலும் இந்த அமைப்பானது "கிறுஸ்தவ மற்றும் யாசிடி பெண்கள் மீது தங்களுக்கு உரிமை உள்ளது" எனும் வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் வினியோகிக்கின்றனர். பூப்பெய்தாதப் பெண்களுடன்கூட அவர்கள் பாலியல் உறவு கொள்ளலாம் என அந்தத் துண்டுப் பிரசுரங்களில் கூறப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சிக்கிக் கொண்டவர்களில் சிலர் மணிக்கட்டில் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கும் முயலுகின்றனர்.[15][16]

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்